டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

37% உயா்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் விற்பனை 21 லட்சம் டன்னாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பா் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் விற்பனை 15 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் இந்த சிறந்த செயல்திறன் 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வளா்ச்சி வேகத்தைத் தக்கவைக்க உதவியது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் உயா்ந்து 147 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது 126 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.