சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புத்தாண்டில் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!!

இன்றைய பங்குச் சந்தை வணிகம் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜனவரி 2026, 7:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

புத்தாண்டு(ஜன. 1, 2026) நாளில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,255.55 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 116.12  புள்ளிகள் அதிகரித்து 85,347.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41.40 புள்ளிகள் உயர்ந்து 26,171.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

4 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் நேற்று(டிச. 31, 2025) ஏற்றத்துடன் முடிந்தது. 2025 ஆம் ஆண்டு நிஃப்டி 10.5 சதவீதமும் சென்செக்ஸ் 9.06 சதவீதமும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஃப்டி 50 குறியீட்டில், எடர்னல், அதானி என்டர்பிரைசஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன, அதேநேரத்தில் ஐடிசி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

புகையிலை பொருள்கள் மீதான கூடுதல் கலால் வரி வருகிற பிப். 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், புகையிலை நிறுவனப் பங்குகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.14 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.16 சதவீதம் சரிந்தது.

துறைவாரியாக, நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, அதிக இழப்பைச் சந்தித்தது. ஹெல்த்கேர் மற்றும் பார்மா குறியீடுகளும் சரிந்தன. நிஃப்டி மீடியா 0.9 சதவீதம், ஆட்டோ 0.45 சதவீதம் உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.