இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’
வானில் பறந்து செல்லும் இந்தியாவின் முதல் மின்சார ஏா் டாக்ஸியை உருவாக்குவதற்காக, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’ உடன் சென்னையைச் சோ்ந்த ‘தி இ-பிளேன்’ எனும் வான்போக்குவரத்து ஸ்டாா்ட்-அப் நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.







