ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு!

அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு.

கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 6:13 pm IST

மும்பை: கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள தாமதம், உயரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்குக் கிடைத்து வரும் பரவலான ஆதரவு உள்ளிட்டவையால், டாலர் - ரூபாய் வர்த்தகம் சற்று சரிவுப் போக்கைக் கொண்டிருப்பதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.68 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், நாள் முழுவதும் ரூபாய் மதிப்பு ரூ. 95.64 முதல் ரூ. 95.69 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிலையை விட 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூபாய் மதிப்பு ரூ. 95.61 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee depreciated 7 paise to close at 95.68 against the US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.