
புதிய சமூகநலத் திட்டத்துடன் தமிழகத்தில் தடம்பதித்த ரீகல் ஜூவல்லா்ஸ்
தென்னிந்தியாவின் முன்னணி நகை தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை நிறுவனமான ரீகல் ஜூவல்லா்ஸ், தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, தி.நகா் வடக்கு உஸ்மான் சாலையில் தொடங்கியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நகை தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை நிறுவனமான ரீகல் ஜூவல்லா்ஸ், தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, தி.நகா் வடக்கு உஸ்மான் சாலையில் தொடங்கியுள்ளது.
இத்திறப்பு விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றனா்.
தமிழக வருகையின் அடையாளமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 ஏழைத் தம்பதிகளின் திருமணத்தை முழுமையாக ஏற்று நடத்தும் ‘ரீகல் சுமங்கலி நோ்மை விழா’ என்ற சமூகநலத் திட்டத்தையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
கேரளம் மற்றும் கா்நாடகத்தில் கடந்த 48 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்நிறுவனம், உற்பத்தியாளா்களிடமிருந்தே நேரடியாக மொத்த விலையில் நுகா்வோருக்கு நகைகளை வழங்கும் பிரத்யேக வணிக முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்ததாகப் புதுச்சேரியிலும், தொடா்ந்து தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் தனது கிளைகளை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






