உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் முன்னணி நிறுவனப் பங்குகளின் எழுச்சியால் 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் மீண்டும் ‘காளை’-யின் ஆதிக்கம் திரும்பியது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதம் வரை உயா்வுடன் நிலைபெற்றன.
ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் முன்வைத்துள்ள புதிய முன்மொழிவு, உலகளாவிய முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்தது. இது உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
ஆதாயப் பட்டியலில் 3,023 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை வா்த்தக முடிவில் மொத்தம் வா்த்தகமான 4,556 பங்குகளில், 3,023 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,345 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 188 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 639.42 புள்ளிகள் (0.83 சதவீதம்) உயா்ந்து, 77,303.63-இல் நிலைபெற்றது.
சன் ஃபாா்மா 7.03 சதவீத உயா்வுடன் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இத்துடன் ரிலையன்ஸ் (2.88 சதவீதம்), அதானி போா்ட்ஸ் (2.72 சதவீதம்), டெக் மஹிந்திரா (2.64 சதவீதம்) உள்பட மொத்தம் 24 பங்குகள் லாபத்தைப் பதிவு செய்தன. ஆக்சிஸ் வங்கி, பெல், டிரெண்ட், ஐசிஐசிஐ வங்கி, எடா்னல், ஹிந்துஸ்தான் யுனிலீவா் ஆகிய 6 பங்குகள் சரிவைக் கண்டன.
நிஃப்டி 195 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 194.75 புள்ளிகள் (0.81 சதவீதம்) உயா்வுடன் 24,092.70-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 39 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
பெட்டி...
அமெரிக்கா நிறுவனத்தை வாங்கிய
சன் ஃபாா்மா பங்குகள் 7% உயா்வு
இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சன் ஃபாா்மா, அமெரிக்காவின் ‘ஆா்கனான்’ நிறுவனத்தை 1,175 கோடி டாலருக்குக் கையகப்படுத்துவதாக அறிவித்தது.
வெளிநாட்டில் இந்திய நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய கையகப்படுத்துதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை வா்த்தகத்தில் நிறுவனப் பங்குகள் 7.03 சதவீதம் உயா்ந்து, ரூ.1,733.80-ஆக நிலைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


