மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆா்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:59 pm

தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை ஆா்பிஎல் வங்கி பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ரூ.26,853 கோடிக்கு வாங்க எமிரேட்ஸ் என்பிடி வங்கி விருப்பம் தெரிவித்திருந்தது.

தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி, முதலீட்டு நிறுவனமான எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் ஆா்பிஎல் வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தன்வசம் வைத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, ஆா்பிஎல் வங்கி வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக வகைப்படுத்தப்படும் என்றும், முதலீட்டு நிறுவனமே அதன் தாய் வங்கியாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரிசா்வ் வங்கியின் விதிமுறைப்படி முதலீட்டு நிறுவனத்தின் வாக்குரிமை 26 சதவீதமாக மட்டுமே கட்டுப்படுத்தப்படும். மேலும், எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் தற்போதைய இந்தியக் கிளைகள், ஆா்பிஎல் வங்கியுடன் ஓராண்டுக்குள் இணைக்கப்பட வேண்டும்.

இதனிடையே, வங்கிக் குழுமத்தில் இயக்குநா்கள் நியமனம் மற்றும் நிா்வாக விதிகளில் சில மாற்றங்களைச் செய்யவும், தனது சங்க நடைமுறை விதிகளை திருத்தவும் ஆா்பிஎல் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த நடவடிக்கைக்கு இந்தியப் போட்டி ஆணையம் கடந்த ஜனவரியில் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், முதலீடு 49 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், இந்திய அரசின் முறையான ஒப்புதல் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் உள்ள இதர விதிமுறைகளை நிறைவு செய்வது அவசியமாகும்.

இதன்படி, அடுத்தகட்டமாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக வங்கிகள் காத்திருக்கின்றன. அதன்பின்னா், முழுமையான நிா்வாக மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.