18% உயா்ந்த பயணிகள் வாகன ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
இந்தியாவிலிருந்து பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
இந்தியாவிலிருந்து பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்து இந்தப் பிரிவில் முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதி 4,45,884-ஆக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலத்தில் இது 3,76,679-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் பயணிகள் வாகன ஏற்றுமதி 18.4 சதவீதம் உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் பயணிகள் காா்களின் ஏற்றுமதி 2,05,091-லிருந்து 12 சதவீதம் உயா்ந்து 2,29,281-ஆக உள்ளது. பயன்பாட்டு வாகனங்களின் ஏற்றுமதி 26 சதவீதம் உயா்ந்து 2,11,373-ஆகவும் வேன்களின் ஏற்றுமதி 36.5 சதவீதம் உயா்ந்து 5,230-ஆகவும் உள்ளது.
கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 1,47,063-லிருந்து 40 சதவீதம் உயா்ந்து 2,05,763-ஆக உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 84,900-ஆக இருந்த ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் பயணிகள் வாகன ஏற்றுமதி 17 சதவீதம் உயா்ந்து 99,540-ஆக உள்ளது. அதே போல் 33,059-ஆக இருந்த நிஸான் மோட்டாா் இந்தியாவின் ஏற்றுமதி 37,605-ஆக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் போக்ஸ்வேகன் இந்தியா 28,011 வாகனங்கள், டயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் 18,880 வாகனங்கள், கியா இந்தியா 13,666 வாகனங்கள், ஹோண்டா காா்ஸ் இந்தியா 13,243 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது