நைக்காவின் 2-வது காலாண்டு வருவாய் 6% உயர்வு!
எஃப்எஸ்என் இ-காமர்ஸ், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து ரூ.34.4 கோடியாக பதிவு செய்ததையடுத்து அதன் பங்குகள் 6% உயர்ந்தன.
எஃப்எஸ்என் இ-காமர்ஸ், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து ரூ.34.4 கோடியாக பதிவு செய்ததையடுத்து அதன் பங்குகள் 6% உயர்ந்தன.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புதுதில்லி: நைக்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஃப்எஸ்என் இ-காமர்ஸ், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் பன்மடங்கு வளர்ச்சியடைந்து ரூ.34.4 கோடியாக பதிவு செய்ததையடுத்து அதன் பங்குகள் 6% உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 5.98% உயர்ந்து ரூ.260.65 ஆக இருந்தது. என்எஸ்இ-யில் அதன் பங்குகள் 5.75% உயர்ந்து ரூ.260 ஆக முடிவடைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று எஃப்எஸ்என் இ-காமர்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் பல மடங்கு வளர்ச்சி அடைந்து ரூ.34.4 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.10.04 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
நிதியாண்டின் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் நைக்கா வருவாய் 25.13% அதிகரித்து ரூ.2,345.98 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,874.74 கோடியாக இருந்தது.
இதற்கிடையில், நைக்கா பிப்ரவரி 12, 2026 முதல் பிப்ரவரி 11, 2031 வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஃபால்குனி நாயர் என்பவரை நிர்வாக தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமித்துள்ளது.
இதையும் படிக்க: ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது