2025-26 நிதியாண்டில் 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு
அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புதுதில்லி: அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நவம்பர் 7 தேதியிட்ட கடிதத்தில், மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரியை நீக்கவும் மத்திய உணவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றார். நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடப்பு 2025-26 ஆம் ஆண்டு 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது என்றார் ஜோஷி. இது ஏற்றுமதி ஒதுக்கீடு தொழில்துறை கோரிய 2 மெட்ரிக் டன்னை விட குறைவு.
செப்டம்பர் வரை முடிவடைந்த 2024-25 பருவத்தில் 1 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டில் இந்தியா சுமார் 8,00,000 டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி, உள்நாட்டு ஆண்டு தேவை 28.5 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், உற்பத்தி 34 மெட்ரிக் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் உணவு செயலாளர் சோப்ரா.
இதையும் படிக்க: தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு
The Centre has decided to allow export of 1.5 million tonne of sugar for the 2025-26 according to Food Minister Pralhad Joshi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது