மொபைல் போன் இறக்குமதி 0.02% சரிவு!
நாட்டில் மொபைல் போன் இறக்குமதி 2024-25 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தேவை 0.02% குறைந்துள்ளது.
நாட்டில் மொபைல் போன் இறக்குமதி 2024-25 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தேவை 0.02% குறைந்துள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொபைல் போன் இறக்குமதி 2024-25 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தேவை 0.02% குறைந்துள்ளது. இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்பு 75% இருந்தது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மின்னணுப் பொருட்களின் உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டில் 1.9 லட்சம் கோடியிலிருந்து கடந்த ஆண்டில் ரூ.11.3 லட்சம் கோடியாக, அதாவது 6 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆத்ம நிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, மின்னணு உற்பத்திக்கான முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு பிறகு முறையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரசாதா தெரிவித்தார்.
2014-15ல் சுமார் ரூ.18,000 கோடியாக இருந்த மொபைல் போன் உற்பத்தி, தற்போது 28 மடங்கு அதிகரித்து ரூ.5.5 லட்சம் கோடியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2014-15ல் ஆண்டில் 0.01 லட்சம் கோடியாக இருந்த மொபைல் போன் ஏற்றுமதி, கடந்த ஆண்டு (2024-25) 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட கைபேசிகளைச் சார்ந்திருப்பது அதே காலகட்டத்தில் 75 சதவிகிதத்திலிருந்து 0.02 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றார்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!
Mobile phone imports in the country have become almost negligible at around 0.02 per cent of domestic demand in 2024-25.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது