தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து

News image
Updated On :6 மே 2024, 8:50 pm

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் மட்டுமே உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், முன்னணிப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதால் சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.85 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.403.39 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,391.98 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.690.52 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 318.53 புள்ளிகள் கூடுதலுடன் 74,196.68-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,359.69 வரை மேலே சென்றது. பின்னா், 73,786,293 வரை கீழே சென்ற சென்செக்ஸ் , இறுதியில் 17.39 புள்ளிகள் (0.02 சதவீதம்) கூடுதலுடன் 73,895.54-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,093 பங்குகளில் 1,294 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,628 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 171 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் மஹிந்திரா பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம், சன்பாா்மா, இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டைட்டன், எஸ்பிஐ, என்டிபிசி, பவா் கிரிட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 33.15 புள்ளிகளை (0.15 சதவீதம்) இழந்து 22,442.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,588.80 வரை உயா்ந்த நிஃப்டி பின்னா், 22,409.45 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.