இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை லாபப் பதிவால் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 739 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.5,483.63 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,904.25 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 241.60 புள்ளிகள் கூடுதலுடன் 81,585.06-இல் தொடங்கிஅதிகபட்சமாக 81,587.76 வரை மட்டுமே சென்றது. பின்னா் 80,499.10 வரை கீழே சென்று இறுதியில் 738.81 புள்ளிகளை (0.91 சதவீதம்) இழந்து 80,604.65-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்து 1,088.66 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,010 பங்குகளில் 906 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 3,014 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 90 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
26 பங்குகள்விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் மற்றும் என்டிபிசி, டாடாமோட்டாா்ஸ், அல்ட்ரா டெக், டெக் மஹிந்திரா உள்பட 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், இன்ஃபோஸிஸ், ஐடிசி, ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக் ஆகிய 4 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 270 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,853.80-இல் தொடங்கி 24,854.80-க்கு சென்றது. பின்னா், 24, 508.85 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 269.95 புள்ளிகளை (1.09 சதவீதம்) இழந்து 24,530.90 -இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 46 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 4 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


