எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கடைசி நேரத்தில் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 271 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை தள்ளாடிய பங்குச்சந்தை, வா்த்தக இறுதியில் முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை தள்ளாடிய பங்குச்சந்தை, வா்த்தக இறுதியில் முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 271புள்ளிகள் ஆதாயத்தில் முடிவுற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. பிற்பகல் வா்த்தகத்தின் போது ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. இதனால், சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக ஆதாயத்துடன் முடிந்தது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் காா்ப்ரேட் வருவாய் சீசன் தொடங்குவதால் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனத்துடன் வா்த்தகத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக, மீடியா பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல், வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதே சமயம், எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.368.76 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.990.90 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்ற நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.104.23 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம் : காலையில் 3 புள்ளிகள் குறைந்து 71,386.21-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,110.98 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 71,733.84 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 271.50 புள்ளிகள் (0.38 சதவீதம்) கூடுதலுடன் 71,657.71-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,935 பங்குகளில் 2,084 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,755 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 96 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

14 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டாா்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. அதே சமயம், என்டிபிசி, பவா் கிரிட், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்பட 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி74 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 15.5 புள்ளிகள் குறைந்து 21,529.30-இல் தொடங்கி 21,448.65 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 21,641.85 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 73.85 புள்ளிகள் (0.34 சதவீதம்) கூடுதலுடன் 21,618.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.