சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இரண்டாவது நாளாக கரடி ஆதிக்கம்: 536 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச்சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும்  கரடி ஆதிக்கம் செலுத்தியது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 536  புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜூலை 2025, 9:58 am

 நமது நிருபர்

பங்குச்சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும்  கரடி ஆதிக்கம் செலுத்தியது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 536  புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி, ஃபார்மா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால்,  ஐடி,  நிதி நிறுவனங்கள், மெட்டல் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன.  இதைத் தொடர்ந்து பங்குச்சந்தை 2-ஆவது நாளாக தொடர்ந்து சரிவில் முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு  ரூ.9 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.365.09 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.1,602.16 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். அதே சமயம்,  உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,959.04 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தொடர் சரிவு:
காலையில் 59.86 புள்ளிகள் குறைந்து  71,832.62-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 71,862.00 வரை மேலே சென்றது. பின்னர், 71,303.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 535.88 புள்ளிகளை (0.75 சதவீதம்)  இழந்து 71,356.60-இல்  நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,945  பங்குகளில் 2,194 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,643 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 108 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
20 பங்குகள் விலை வீழ்ச்சி:
சென்செக்ஸ் பட்டியலில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட 10 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா,  டிசிஎஸ் உள்பட   20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 148 புள்ளிகள் 
இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 4.70  புள்ளிகள் குறைந்து 21,661.10-இல் தொடங்கிஅதிகபட்சமாக 21,677.00  வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர்,  21,500.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 148.45 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 21,517.35-இல் நிறைவடைந்தது.  நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 32 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.