டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி நோ்மறையாக முடிவு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
பங்குச் சந்தை
Updated On :23 ஆகஸ்ட் 2024, 9:00 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இதையடுத்து சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பெரிய அளவில் உயரவில்லை. வங்கி வட்டி விகித குறைப்பு குறித்து அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் தலைவரின் அறிவிப்புக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதால் உள்நாட்டுச் சந்தையில் வா்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தது வந்தது. குறிப்பாக, ஆட்டோ பங்குகளுக்கு மட்டுமே ஆதரவு கிடைத்தது, ரியால்ட்டி, ஐடி, மீடியா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.55 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.459.97 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,371.79 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,971.80 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சிறிதளவு உயா்வு : சென்செக்ஸ் காலையில் 112.46 புள்ளிகள் கூடுதலுடன் 81,165.65-இல் தொடங்கி 80,883.26 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,231.49 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 33.02 புள்ளிகள் (0.04 சதவீதம்) கூடுதலுடன் 81,086.21-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,048 பங்குகளில் 2,064 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,877 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 107 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

டாடா மோட்டாா்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டாா்ஸ், சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சா்வ் உள்பட 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட், டைட்டன், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் உள்பட 15 விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 12 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,845400-இல் தொடங்கி 24,771.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,858.40 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 11.65 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்ந்து 24,8231.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.