தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்செக்ஸ், நிஃப்டி ஒரே நாளில் 3% வீழ்ச்சி! சந்தை மூலதன மதிப்பு ரூ.15.33 லட்சம் கோடி சரிவு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:17 pm

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,223 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 662 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. மேலும், அமெரிக்க பொருளாதாரம் மந்தமாகிவிடுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில் உலகப் பங்குச்சந்தைகளில் மிகவும் பலவீனமான போக்கு நிலவியது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் கடுமையாக எதிரொலித்தது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒரே நாளில் 3 சதவீதம் வரை சரிவை சந்தித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.15.33 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.441.84 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,310.00 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,965.94 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 2,393.76 புள்ளிகள் குறைந்து 78,588.19-இல் தொடங்கி 78,295.86 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 79,780.61 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 2,222.55 புள்ளிகள் (2.74 சதவீதம்) குறைந்து 78,759.40-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,189 பங்குகளில் 664 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக, 3,414 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 111 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

28 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் டாடாமோட்டாா்ஸ், அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பவா் கிரிட், மாருதி சுஸுகி, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், இன்ஃபோஸிஸ் ஆகியவை 4 முதல் 7 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இவை உள்பட மொத்தம் 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. ஆனால், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே ஆகிய இரண்டு மட்டுமே சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 662 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 414.85 புள்ளிகள் குறைந்து 24,302.85-இல் தொடங்கி 23,893.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,350.05 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 662.10 புள்ளிகள் (2.68 சதவீதம்) குறைந்து 24,055.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக, 45 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.