இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 845 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையும் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. ஆயில் அண்ட் காஸ் குறியீடு மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தது. வங்கி, ஆட்டோ, நிதிநிறுவனங்கள், பாா்மா உள்பட அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதனால், தொடா்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 8,027 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,341.53 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.5.20 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.394.48 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: காலையில் 929.74 புள்ளிகள் குறைந்து 73,315.16-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதற்கு கீழே செல்லவில்வை. பின்னா், அதிகபட்சமாக 73,905.80 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 845.12 புள்ளிகள் (1.14 சதவீதம்) குறைந்து 73,399.78-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,049 பங்குகளில் 913 பங்குகள் மட்டுமேஆதாயப் பட்டியலில் வந்தது. 2,991 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 145 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
27 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டாா்ஸ், எல் அண்ட் டி உள்பட 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, மாருதி, பாா்தி ஏா்டெல் ஆகிய 3 பங்குகள் மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 247 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 246.90 புள்ளிகள் (1.10 சதவீதம்) குறைந்து 22,272.50-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,259.55 வரை கீழே சென்ற சென்ற நிஃப்டி, பின்னா் 22,427.45 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள்மட்டுமேஆதாயப் பட்டியலில் வந்தன. மாறாக 44 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


