நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

வாகன நிறுவன பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜூலை 2025, 9:57 am

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 0.25 புள்ளிகள் மட்டுமே குறைந்து 18,118.30-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உயர்ந்தே தொடங்கியது. அதன்பிறகு லாபப் பதிவு காரணமாக தள்ளாட்டம் கண்டது. தொடர்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் எதிர்மறையாகச் சென்றது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் கிடைத்த சிறிதளவு ஆதரவால் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலை கொண்டது. பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, பார்மா பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. அதே சமயம், ஆட்டோ, ஐடி பங்குளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பெரும் சரிவு தவிர்க்கப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்:
 சென்செக்ஸ் காலையில் 180.53 புள்ளிகள் கூடுதலுடன் 61,122.020-இல் தொடங்கி, அதிகபட்சமாக 61,266.06 வரை மேலே சென்றது. பின்னர், 60,849.12 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 37.08 புள்ளிகள் (0.06 சதவீதம்) கூடுதலுடன் 60,978.75-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 டாடா மோட்டார்ஸ், மாருதி அபாரம்:
 பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 3.34 சதவீதம், மாருதி சுஸுகி 3.21 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 ஆக்ஸிஸ் பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ. 280.20 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.219.87 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.