கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரிலையன்ஸ், ஐடிசி அபாரம்: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு

கடந்த இரண்டு நாள்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை நேர்மறையாக முடிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜூலை 2025, 9:57 am

தினமணி

கடந்த இரண்டு நாள்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை நேர்மறையாக முடிந்தது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 158.95 புள்ளிகள் (0.89 சதவீதம்) உயர்ந்து 17,929.85-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்ததன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், ஐடிசி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், ஐடி, வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. இவை சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு திங்கள்கிழமை ரூ.22 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.265.99 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.1,322.39 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 118.41 புள்ளிகள் கூடுதலுடன் 60,550.25-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. அதிகபட்சமாக 61,102.74 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 600.42 புள்ளிகள் (0.99 சதவீதம்) கூடுதலுடன் 61,032.26-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் ஆதாயம் பெற்றன.
 ஐடிசி, ரிலையன்ஸ் முன்னேற்றம்: பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 3.31 சதவீதம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 2.35 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ, ஹெச்சிஎல் டெக், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 1 முதல் 1.85 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
 என்டிபிசி சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 1.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, சன்ஃபார்மா, எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், ஏசியன் பெயின்ட், மாருதி உள்ளிட்டவை 0.50 முதல் 0.90 சதவீதம் வரை குறைந்தன. மேலும், கோட்டக் வங்கி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.