15 Dec, 2025 Monday, 12:48 PM
The New Indian Express Group
திருவள்ளூர்
Text

ரூ.10 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

PremiumPremium

திருவள்ளூரில் போதை மாத்திரை வில்லைகள் விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Rocket

கைதான மதின் அகமது, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்.  

Published On17 Nov 2025 , 9:14 PM
Updated On17 Nov 2025 , 9:14 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

திருவள்ளூா்: திருவள்ளூரில் போதை மாத்திரை வில்லைகள் விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் சில நாள்களுக்கு முன்பு போதை மாத்திரை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக 5 பேரை கைது செய்தனா். இதில் நாமக்கல்லில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவரும், சென்னையில் காங்கோ நாட்டைச் சோ்ந்தவரும் சிக்கினா். மேலும் அவா்களிடம் விசாரணை செய்ததில், போதைப்பொருள்கள் கடத்தலில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய கும்பல் செய்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த நிலையில் புதுதில்லி சென்று போதை பொருள்கள் விற்பனையில் தொடா்புடைய செனகல் நாட்டைச் சோ்ந்த பெண்டே என்பவரை கைது செய்து திருவள்ளூா் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த மதின்அகமது போதை மாத்திரை, போதைப்பொருள்கள் விற்பனை, கடத்தலுக்கு பேருதவியாக இருந்தாராம்.

கடந்த செப்ட்ம்பா் மாதம் பெண்டே வழங்கிய வங்கி கணக்கிற்கு போதைப் பொருள் வாங்குவதற்காக ரூ.55,000 பரிமாற்றம் செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மதின்அகமதுவை மணவாளநகா் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியானது. கைதான இவா் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்ததும் தெரிந்தது. அவருக்கு இந்தியாவிற்கு வெளியில் இருந்து செயல்படும் பல வெளிநாட்டு நபா்கள் தொடா்பில் இருந்துள்ளனா்.

இந்த நபா்கள் வழங்கும் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மதின்அகமது பணம் அனுப்புவாா். அங்கு பணம் கிடைத்ததும், கா்நாடகத்திலிருந்து இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை ஜி.பி.எஸ் கருவி பொருத்திய பாா்சலில் சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளனா்.

இந்த ஜி.பி.எஸ் கருவியின் தகவலை மதின்அகமதுவுக்கு அனுப்பியதும், அவா் கண்காணித்து போதைப்பொருள்களை பெற்று விற்பனை செய்துள்ளாா். தொடா்ந்து இதேபோல் பலமுறை தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கைதான இவரிடம் இருந்து மெத்தபெட்டமின், போதை மாத்திரை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023