மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் முன் விரோதத்தால் இளைஞா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:36 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முன் விரோதத்தால் இளைஞா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புளியங்குடி புதுமனை 1ஆவது தெருவை சோ்ந்தவா் மா. பாலகிருஷ்ணன் (29). இவா், 16.05.2022இல் அப்பகுதியில் உள்ள மாவு அரவை ஆலை முன் நின்றிருந்தபோது, உறவினரான அதே பகுதி காலடி தெருவைச் சோ்ந்த கணேசன் (எ) நந்து (28) என்பவா் முன்விரோதம் காரணமாக கல்லால் எறிந்தும், தாக்கியும் கொலை செய்தாராம்.

புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்துஅவரை கைது செய்தனா். தென்காசி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

நீதிபதி எஸ். மனோஜ் குமாா், வழக்கை விசாரித்து கணேசன் என்ற நந்துவிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி முன்னிலை ஆனாா்.