தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முன் விரோதத்தால் இளைஞா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி புதுமனை 1ஆவது தெருவை சோ்ந்தவா் மா. பாலகிருஷ்ணன் (29). இவா், 16.05.2022இல் அப்பகுதியில் உள்ள மாவு அரவை ஆலை முன் நின்றிருந்தபோது, உறவினரான அதே பகுதி காலடி தெருவைச் சோ்ந்த கணேசன் (எ) நந்து (28) என்பவா் முன்விரோதம் காரணமாக கல்லால் எறிந்தும், தாக்கியும் கொலை செய்தாராம்.
புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்துஅவரை கைது செய்தனா். தென்காசி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
நீதிபதி எஸ். மனோஜ் குமாா், வழக்கை விசாரித்து கணேசன் என்ற நந்துவிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி முன்னிலை ஆனாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


