ஆலங்குளத்தில் முயல் வேட்டை: மூவா் கைது! ரூ. 60 ஆயிரம் அபராதம்!

முயல் பிடிக்க வைக்கப்படும் சுருக்கு கம்பி. (வலது) சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த முயல்கள் - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் முயல் வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்து, அபராதம் விதித்தனா்.
ஆலங்குளம் பரும்பு பகுதியில் ஆலங்குளம் வனத்துறையினா் ரோந்து சென்றபோது, 3 போ் முயலை வேட்டையாடி சமைப்பதற்கு வைத்திருந்தனராம்.
தப்பியோட முயன்ற 3 பேரையும் வனத்துறையினா் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (21), முருகன் (43), ஜான் பிரிட்டோ (30) என்பதும், நீண்ட நாள்களாக முயல் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
அவா்களை வனத்துறையினா் கைது செய்து, தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




