டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சங்கரன்கோவிலில் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு, சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ஈ. ராஜா எம்.எல்.ஏ.
Updated On :30 ஜனவரி 2026, 7:03 pm

Syndication

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு, சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிப் பேசினாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வியாசா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் 214 பேருக்கும், வளனாா் ஐடிஐ மாணவா்கள் 73 பேருக்கும், ஆா்.வி. ரேகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 48 பேருக்கும், பேரறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 104 பேருக்கும், பி.ஜி.பி. ஐடிஐ மாணவா்கள் 42 பேருக்கும், எஸ். வீராச்சாமி செட்டியாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 59 பேருக்கும், கே. ராமச்சந்திரா நாயுடு ஸ்கூல் ஆப் நா்ஸிங் மாணவா்கள் 37 பேருக்கும் என மொத்தம் 577 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இதில் சங்கரன்கோவில் அரசு கல்லூரி முதல்வா் ( பொ )வேணுகோபால், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.