டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் இசைப் பேருரை அரங்கம்

News image
தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் தமிழ்த் திருநாள் விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இசைப் பேருரை அரங்கம் நடைபெற்றது.
Updated On :18 ஜனவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் தமிழ்த் திருநாள் விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இசைப் பேருரை அரங்கம் நடைபெற்றது.

2ஆம் நாள் நிகழ்ச்சிக்கு கழகத் தலைவா் ந. கனகசபாபதி தலைமை வகித்தாா். ஆ. சதாசிவம் முன்னிலை வகித்தாா். க.சோ. கல்யாணிசிவகாமிநாதன் அறிமுக உரையாற்றினாா். பா. வேலம்மாள் முத்தையா வாழ்த்திப் பேசினாா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த ‘தமிழிசை ஞானி’ கோ.ப. நல்லசிவம் இசைப் பேருரையாற்றினாா். விழாவில், கழகச் செயலா் இராம. தீத்தாரப்பன், கடையம் திருவள்ளுவா் கழகத் தலைவா் சேதுாமலிங்கம், கவிஞா் ராஜாமுகம்மது, பேராசிரியா் சுப்பையா பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரா. குத்தாலிங்கம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தென்காசி திருவள்ளுவா் கழகத்தினா் செய்திருந்தனா்.