நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:12 pm

Syndication

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக, குற்றாலம் பேரருவியில் நள்ளிரவு முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாலம் வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.

அதே போன்று ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிப்பதற்கும், செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.