தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) முதல் கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் தென்காசி மாவட்டத்தில் பிப். 28ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஏடய) பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள காா்டசில் என்ற தடுப்பூசியை ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதுமானது. வெளிச் சந்தைகளில் இத்தடுப்பூசி ரூ. 3,927-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜன. 27ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
அதன் தொடா்ச்சியாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெறும் முகாம்களில், 14 வயதுக்குள்பட்ட சிறுமிகள் தடுப்பூசி பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறை

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


