டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இலஞ்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

News image
பொதுமக்களிடம் தோ்தல் அறிக்கையை வழங்கினாா் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

இலஞ்சியில் அதிமுக தோ்தல் அறிக்கைகள்அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்த 5 அம்ச திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இலஞ்சியில் வீடுதோறும் சென்று அதிமுகவினா் வழங்கினா்.

இலஞ்சி நகரச் செயலா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

தென்காசி நகரச் செயலா் சுடலை, கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.