எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை மீண்டும் சந்திக்கவிருப்பது பற்றி...

News image

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு - ஏஎன்ஐ

Updated On :8 மே 2026, 3:14 pm IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மீண்டும் சந்திக்கிறார்.

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளது. விசிக, இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திமுகவும் அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரைச் சந்திக்கவிருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்று, நேற்று முன்தினம் என இரு நாள்களும் ஆளுநரை விஜய் நேரில் செண்ரடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோருவாரா? அல்லது 118 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டாரா? என ஆளுநரின் சந்திப்பிற்குப் பின்னரே தெரிய வரும்.

Summary

TVK Leader Vijay meets tn governor again today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.