தவெக தலைவா் விஜய் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதன்கிழமை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினாா். இருப்பினும் முதல்வராக விஜய் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சென்னைக்கு விமானம் மூலம் வந்தாா். அவரை தவெக சட்டப்பேரவை குழுத் தலைவா் விஜய் ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அளித்தாா்.
தவெக சட்டப்பேரவை தலைவராக தன்னைத் தோ்வு செய்ததற்கான ஆவணம் மற்றும் தவெகவின் 107 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 112 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை கடிதத்துடன் இணைத்து வழங்கியதாகத் தெரிகிறது. சுமாா் 15 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதனிடையே, விஜய் தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழாவுக்காக அரசு சாா்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஆளுநா் தரப்பில் அதற்கான இசைவு தெரிவிக்கப்படாததால் முதல்வராக விஜய் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அறுதிப் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், விஜய் தரப்பில் 112 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதமே ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றால் மீதமுள்ள எம்எல்ஏக்களைப் பெற குதிரை பேரம் நடைபெறும் என்பதால், அவரை ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநா் முடிவு எடுக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுதொடா்பாக சட்டநிபுணா்களின் ஆலோசனையை ஆளுநா் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநருடனான விஜய் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த், நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, பொருளாளா் பி.வெங்கடரமணன், இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், கொள்கை பரப்புப் பொதுச் செயலா் கே.ஜி.அருண்ராஜ் ஆகியோரும் உடனிருந்தனா்.
ஆளுநரை விஜய் சந்தித்துவிட்டு வந்த பின்னா், தவெகவின் சட்ட ஆலோசக அணியினா் ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை இரவு சென்று சந்தித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரபரப்பாக காணப்பட்ட பனையூா்
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்

தவெக ஆட்சி அமைக்கும்: புஸ்ஸி ஆனந்த்
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


