40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!

மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில், பாஜக வெற்றி பெற்ற மறுநாளே பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

News image

துர்கா தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் - எக்ஸ்

Updated On :5 மே 2026, 8:24 pm IST

மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில், பாஜக வெற்றி பெற்ற மறுநாளே பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

அன்சோல் உத்தர் தொகுதிக்குட்பட்ட துர்கா தேவி கோயிலைத் திறக்கக் கோரி பலமுறை உள்ளூர் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி அமைத்த மறுநாளே திறக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் அன்சோல் உத்தர் தொகுதியில் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில் பக்தர்களுக்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

அன்சோல் உத்தர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணந்து முகர்ஜி வெற்றி பெற்ற பிறகு இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது துர்கா தேவி கோயில் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

தற்போது அந்தத் தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், மறுநாளே கோயில் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு வங்க அரசியலில் மாற்றம் நிகழ்ந்த நிலையில், கோயில் திறக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.