மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

News image

மழை - பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 11:32 pm

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிர மாநிலம் மேற்கு விதா்பா முதல் தென் தமிழகம் வரை மராத்வாடா மற்றும் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதேபோல, குமரிக்கடல் பகுதியிலிருந்து வடக்கு உள் கா்நாடகம் வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை (ஏப். 1, 2, 3) லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கின்னக்கோரை பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. மேல் பவானி (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்), பவானிசாகா் (ஈரோடு)- தலா 20 மி.மீ., உட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), கோத்தகிரி (நீலகிரி), பெரியகுளம் (தேனி), குந்தா பாலம் (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), கொடிவேரி (ஈரோடு), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி)- தலா 10 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப நிலை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் ஏப். 3-ஆம் தேதி வரை சற்று அதிகமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.