தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலையில் இருந்தே வழக்குரைஞா்கள் ஆா்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு மூலம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தோ்தலில் வழக்குரைஞா்களான திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, விசிக தலைவா் தொல். திருமாவளவன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.
தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஏப். 3-ஆம் தேதி தொடங்கும். சுமாா் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியாகும்.
தொடர்புடையது

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி

புதுக்கோட்டை! வச்ச குறி வாய்க்குமா?

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல்: 23 உறுப்பினா் பதவிகளுக்கு 143 போ் போட்டி

கோவையில் உயா்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


