மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் இபிஎஸ்: அமைச்சர் சிவசங்கர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

News image

தேசிய ஜனநாயக கூட்டணி மீது அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் - சித்திரிப்பு

Updated On :26 மார்ச் 2026, 7:07 am

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் சா.சி. சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அதிமுக கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "ஒரு காலத்தில் அதிமுக தலைவர்களைச் சந்திப்பதற்காக, வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் வந்தனர். ஆனால், இன்று ஒவ்வொரு முடிவெடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று வருகிறார்.

அப்படியிருக்கையில், அவர் திமுக தலைவரையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் தேவையின்றி விமர்சிக்கிறார். தங்கள் பிரச்னையை தில்லிதான் சரிசெய்யும் என்று அவர்களின் கூட்டணிக் கட்சியினரே சொல்கின்றனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருப்பவர்களை அடிமைகள் என்று இபிஎஸ் சொல்வது தேவையற்ற செயல். குறிப்பாக, விசிகவை அவர் குறை சொல்கிறார்.

அந்தக் கட்சி (விசிக) தேர்தல் களத்தில் சவால்களைச் சந்தித்து, எப்படி படிப்படியாக முன்னேறியது என்பது அனைவருக்கும் தெரியும். விசிக தலைவர் திருமாவளவன், ஒவ்வொரு முறையும் தேர்தலில் தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். எங்கள் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு, இவ்வளவு நல்ல உறவைக் கொண்ட எங்கள் கூட்டணியை இபிஎஸ் விமர்சிக்கிறார்.

அதே வேளையில், அவருடைய (இபிஎஸ்) கூட்டணியில் பாஜகவுக்கு கடந்த முறையைவிட, இந்த முறை அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய ஜனநாயக கட்சி ஆகியோரும் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் நோட்டாவுக்குக் கீழே சென்ற தாமரைக்கு பெரும் இடத்தை இபிஎஸ் வழங்கியுள்ளார்.

வருங்காலத்தில் பிகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை, மகாராஷ்டிரத்தில் சரத் பவார் சந்தித்த நிலைமையும்தான் அதிமுகவுக்கு வரும்.

அதிமுகவின் ஒவ்வோர் அறிவிப்புக்குப் பின்னரும் அமித் ஷாதான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக என்பதையே அடிமை திமுக என்று கூறும் அளவுக்கு அதிமுகவை இபிஎஸ் கொண்டு சென்று விட்டார்.

இன்றைக்கு மோடிதான் எல்லாம் என்று சொல்லி, மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவுக்கு இபிஎஸ் செயல்பட்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

Summary

DMK slams ADMK Leader Palaniswami over remarks on its led alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.