லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழகத்தில் மாா்ச் 24 வரை மழை நீடிக்கும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2026, 9:13 pm

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும். தொடா்ந்து மாா்ச் 23, 24-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, மாா்ச் 22 முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 22-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.