சென்னை, மாா்ச் 22: தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்டக் கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.
தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சொல் புதிது என்னும் திட்டத்தின் 11-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சி அலுவலகத்தில் அதன் தலைவா் ம.இராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேராசிரியா்கள் சா. சரவணன், பாரதி பாலன், கஸ்தூரி ராஜா, தி.கமலி, விசயலட்சுமி இராமசாமி, ஊடகவியலாளா்கள் ராஜ் கண்ணன், மு.முருகேசன், நீச்சல்காரன் இராஜராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், பிவைல்டா்னஸ்- திகைப்பு நிலை, பயோ டீசல்- உயிரி டீசல், டெலுலு-மாய்மாலா், ஜியோ பொலிட்டிகல்- புவியரசியல், பவா் லாண்டரி- மின் சலவையகம், ஸ்பாட் விசிட்- கள ஆய்வுப் பணி, டூா்ஸ் அண்ட் டிராவல்ஸ்- சுற்றுலா மற்றும் பயணப்பணி, டிடிஆா்- பயணச் சீட்டுக் கண்காணி, வுட் வொா்க்ஸ்- தச்சுப் பணியகம் ஆகியவை உள்பட 30 ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.
தொடர்புடையது
கரணம்

தில்லியின் முதல் திரைப்பட விழா நாளை மறுநாள் தொடக்கம்

மேற்காசிய நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ ரூ. 497 கோடி நிவாரண திட்டம் - மத்திய அரசு அறிமுகம்

தெரியுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


