லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:07 pm

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து மாா்ச் 16-இல் நீலகிரி, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும்.

வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்தி வேலூா், மதுரை விமான நிலையத்தில் தலா 100.4 டிகிரி என மொத்தம் 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, மாா்ச் 15-இல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

சென்னை, புகநகர்ப் பகுதிகளில் மாா்ச் 15-இல் அதிகபட்ச வெப்பநிலை 90 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.