தமிழகத்தில் உயர் கல்வியை இலவசமாக்க வேண்டும்! முதல்வருக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள்!
தமிழகத்தில் அனைவரும் உயர் கல்வி கற்கும் வகையில் அதை இலவசமாகக் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுக மேற்குப் பகுதி திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், கவிஞர் தங்கம் மூர்த்தி, சட்டக் கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், முன்னாள் எம்எல்ஏ எம்ஜிகே நிஜாமுதீன், தேர்வாணையக் குழு முன்னாள் உறுப்பினர் லட்சுமணன், தமிழன் பிரசன்னா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.விஜயகுமார், திமுக வர்த்தக அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர்.









