கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்துள்ளது.
இது தொடா்பான வழக்கில் விஜய்க்கு சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சாா்பில் சிபிஐக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்து, அவா் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதே சமயம், அவா் ஆஜராவதற்கான அடுத்த தேதி தொடா்பான அழைப்பாணை உடனடியாக விஜய்க்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
தவெக வேட்பாளா்களுக்கான நோ்காணல் நிகழ்வில் விஜய் கலந்து கொள்வதால் அவரால் சிபிஐ விசாரணைக்காக தில்லி செல்ல இயலவில்லை என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்த வழக்கில் கடந்த ஜனவரி 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.
தொடர்புடையது

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

கரூா் துயர சம்பவம் தொடா்பாக எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது: செந்தில்பாலாஜி எம்எல்ஏ
கரூா் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


