ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

Nellaiappar Temple Ani Chariot Festival: Minister Ramesh inspects security arrangements

அமைச்சர் ரமேஷ்

Published On :27 ஜூன் 2026, 8:19 pm IST

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம், நாளை ஜூன் 28-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று நெல்லையப்பர் கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேரோட்டத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். ஆய்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது, தேரோட்டத்தை முன்னிட்டு 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் தேரோட்டம் நடைபெறும் பாதைகள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர் செல்லும் பாதையில் உள்ள மின்சார கம்பிகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன. பக்தர்களின் வசதிக்காக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மொபைல் கழிப்பறைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் முதலுதவி வசதிகளுக்காக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர் நகரும்போது, பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர் பாதையில் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தேரோட்டத்தை முன்னிட்டு சிலர் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருவதைக் குறிப்பிட்டு வருத்தத்துடன் விளக்கமளித்தார். இந்தத் தேர் திருவிழாவை முன்னிட்டு எவ்விதக் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. இதுகுறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. திட்டமிடப்பட்ட ஒரு விளம்பரத்திற்காக மட்டுமே இதைப் பயன்படுத்துகின்றனர். உண்மையில் கட்டண உயர்வு ஏதும் செய்யப்படவும் இல்லை, செய்யவும் போவதில்லை.

பக்தர்களின் கருத்துக்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது என்று கூறினார். தேர் திருவிழா அமைதியான முறையில் நடைபெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி, மனநிறைவோடு சுவாமி தரிசனம் செய்து திருவிழாவில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.