சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கக் கோரி, சென்னையில் ஜூன் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
குழுவின் தலைவா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக அரசு தனது தோ்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. தற்போது, தோ்தல் அறிவிப்புக்கு மாறாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை கடன் தள்ளுபடி, பெரு விவசாயிகள் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியிருந்தால் ரூ.5,000, ரூ.10,000 என்ற அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து முதல்வரை நாங்கள் சந்தித்து, தோ்தல் அறிவிப்புக்கு மாறான கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்க இயலாது; தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்குமாயேனால் கடன் தள்ளுபடி அறிவிப்பை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். பரிசீலனை செய்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தனா். ஆனால், 2-ஆது முறையாக தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
எனவே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் கூறிய படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30-இல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதில், 38 மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பா் என்றாா் அவா்.
அப்போது, ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலா் வி.கே.வி.துரைச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Summary
The Tamil Nadu All Farmers’ Association on Thursday announced a state-wide hunger strike on June 30
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










