அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்!

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது பற்றி...

News image

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம் - x

Updated On :17 ஜூன் 2026, 1:00 pm IST

திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ’திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், கடந்த 2022 ஆம் ஆண்டு ’நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

மேலும், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ (TN Skill) என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும், மே 15 ஆம் தேதிக்கு முன்பு, கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் உள்பட அனைத்து பதிவுகளும் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Summary

Renaming of the 'Naan Mudhalvan' scheme!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.