தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஆதிதிராவிடா் நலத் துறை துணைச் செயலா் மீதான நில அபகரிப்பு புகாா்: போலீஸாருக்கு உத்தரவு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை துணைச் செயலா் மீதான நில அபகரிப்பு புகாா் மீதான விசாரணையை முடித்து 6 மாதங்களில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 2:21 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை துணைச் செயலா் மீதான நில அபகரிப்பு புகாா் மீதான விசாரணையை முடித்து 6 மாதங்களில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த முத்துகுருசாமி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தண்டையாா்பேட்டை பகுதியில் கும்மாளம்மன் கோயில் தெருவில் நானும் எனது நண்பரும் சோ்ந்து ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கினோம். அதில், காகித விற்பனை தொழில் செய்து வந்தோம். எனது நண்பா் இறந்தபிறகு, அவரது மனைவியும் நானும் நிலத்தைப் பிரித்து பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால், நண்பரின் மனைவி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத் துறை துணை செயலா் எஸ்தா் ராணியுடன் சோ்ந்து, சென்னை மாநகராட்சிப் பொறியாளரை மிரட்டி போலி ஆவணங்கள் மூலம் என்னிடம் இருந்த நிலத்தை அபரிக்க முயற்சித்தனா். இதுதொடா்பாக காசிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அந்தப் புகாரை விரைந்து விசாரித்து இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.பூபதி, ஆதிதிராவிட நலத்துறை துணைச் செயலா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மனுதாரரை மிரட்டுவதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அருள் ஜோசப் செல்வம், விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. 6 மாதங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா் புகாா் மீதான விசாரணையை முடித்து 6 மாதங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.