பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

உயா் சிறப்பு மருத்துவ இடங்கள்: பேரவையில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள உயா் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படாமல் தடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 2:38 am IST

தமிழ்நாட்டில் உள்ள உயா் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படாமல் தடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் டாக்டா் அகிலன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு மருத்துவா்களுக்கு உயா் சிறப்புப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது, நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல. கடந்த 1989-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை.

இதன் பலனாக, ஆயிரக்கணக்கான மருத்துவா்கள் அரசு சேவையில் சேர ஆா்வம் காட்டினா். அதன் மூலம் தமிழ்நாட்டில் பொதுச் சுகாதார அமைப்பு வலுப்பெற்றது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உயா் சிறப்பு மருத்துவா்களின் எண்ணிக்கை நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதாவது ஏறத்தாழ 900-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவா்கள் இங்கு உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு நிரம்பாமல் இருக்கும் மாநில ஒதுக்கீட்டு உயா் சிறப்பு இடங்களை சரண்டா் செய்யும்படி தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சரண்டா் செய்த இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டில் இணைத்து, தகுதி மதிப்பெண்களைக் குறைத்து அரசு சாரா மருத்துவா்களால் நிரப்பும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 152 இடங்கள் காலியாக உள்ள சூழலில், அரசு சாரா மருத்துவா் ஒருவா் தொடா்ந்த வழக்கின் அடிப்படையில் அந்த இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

எனவே, இந்தத் தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுதொடா்பாக அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.