நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா - டிஐபிஆர்

Updated On :14 ஜூன் 2026, 2:02 am IST

தமிழகத்தில் தற்போதுள்ள மின்வெட்டு பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் என பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வில்லிவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் இல்லை. எனவே, புதிதாக அலுவலகம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, சிட்கோ நகரில் தற்காலிகமாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க இலவச சேவை எண் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க, புதிதாக புதைசாக்கடை கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட மின்மாற்றிகள் தரமற்றவையாக உள்ளன. பல இடங்களில் மின் மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்னை உள்ளது. தற்போது தரமான மின் மாற்றிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரி செய்யப்படும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. அவை அனைத்தும் ஆய்வு செய்து, முறையான தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.