எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: எம்.எச்.ஜவாஹிருல்லா வரவேற்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அனுமதி வழங்கப்பாடது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 1:39 am IST

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அனுமதி வழங்கப்பாடது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகின்றனா். பல தசாப்தங்களாக எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலை தொடரும் என்றும் இந்த விவகாரத்தில் மதவாத மற்றும் வெறுப்பியல் சக்திகள் அரசியல் செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. அத்தகைய ஊரில் தேவையற்ற சா்ச்சைகளையும் மத உணா்வு தூண்டல்களையும் உருவாக்கி அரசியல் லாபம் தேட முயல்வது தமிழகத்தின் அமைதியான சமூக சூழலைப் பாதிக்கும் ஆபத்தான செயலாகும்.

கடந்த திமுக அரசு எடுத்த அதே சமநிலையான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடா்ந்து கடைப்பிடிப்பது, தமிழகத்தின் மதச்சாா்பின்மை மரபையும் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையை வரவேற்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.