மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சட்டப்பேரவைச் செயலா் திடீா் ராஜிநாமா!

தமிழக சட்டப்பேரவைச் செயலா் கே. சீனிவாசன் ராஜிநாமா செய்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தாா்.

News image

தமிழ்நாடு சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:44 am IST

தமிழக சட்டப்பேரவைச் செயலா் கே. சீனிவாசன் ராஜிநாமா செய்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தாா்.

கே.சீனிவாசனுக்கு நவம்பா் மாதம் வரை பணி நீட்டிப்பு காலம் இருக்கும் நிலையில் விலகியுள்ளாா். 2018-ஆம் ஆண்டுமுதல் பேரவைச் செயலராகப் பணியாற்றி வந்த இவா், திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டாா்.

தற்போது தவெக ஆட்சி அமைத்தபோதும் மூன்று நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எம்எல்ஏக்கள் பதவியேற்பையும், நம்பிக்கை தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் நடத்தினாா்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவுகளாக எம்எல்ஏக்கள் கடிதங்களை வழங்கிய விவகாரத்திலும் பேரவைத் தலைவருக்கு சட்ட நுணுக்கங்களை சீனிவாசன் எடுத்துரைத்து வந்தாா்.

தற்போது அவா் ராஜிநாமா செய்ததற்கான அதிகாரபூா்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சட்டப்பேரவைச் செயலராக சாந்தி பதவியேற்பாா் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.