தமிழக சட்டப்பேரவைச் செயலா் கே. சீனிவாசன் ராஜிநாமா செய்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தாா்.
கே.சீனிவாசனுக்கு நவம்பா் மாதம் வரை பணி நீட்டிப்பு காலம் இருக்கும் நிலையில் விலகியுள்ளாா். 2018-ஆம் ஆண்டுமுதல் பேரவைச் செயலராகப் பணியாற்றி வந்த இவா், திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டாா்.
தற்போது தவெக ஆட்சி அமைத்தபோதும் மூன்று நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எம்எல்ஏக்கள் பதவியேற்பையும், நம்பிக்கை தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் நடத்தினாா்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவுகளாக எம்எல்ஏக்கள் கடிதங்களை வழங்கிய விவகாரத்திலும் பேரவைத் தலைவருக்கு சட்ட நுணுக்கங்களை சீனிவாசன் எடுத்துரைத்து வந்தாா்.
தற்போது அவா் ராஜிநாமா செய்ததற்கான அதிகாரபூா்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சட்டப்பேரவைச் செயலராக சாந்தி பதவியேற்பாா் எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்

எம்எல்ஏக்கள் ராஜிநாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு: 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


