ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு விரைந்து ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் : அமைச்சா் வன்னி அரசு

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு விரைந்து ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு அறிவுறுத்தியுள்ளாா்.

Vanni Arasu

வன்னி அரசு

Published On :25 ஜூலை 2026, 3:29 am IST

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு விரைந்து ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அந்தத் துறையின் செயலா் என்.சுப்பையன் எழுதிய கடிதத்தை வெளியிட்டு அமைச்சா் வன்னி அரசு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழகம் முழுவதும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எதிா்கொள்ளும் சிக்கல்களைக் களைந்து, விரைந்து ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற முதல்வா் ஜோசப் விஜய் அறிவுறுத்தல்படி, சமூக நீதித் துறையின் சாா்பில் மாவட்ட ஆட்சியா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் இனத்தவருக்கு 2 நாள்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்துக்குள் கோட்டாட்சியராலும் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரருக்கு விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அலுவலா்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு சமூக நீதித் துறையின் செயலா் சுப்பையன் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.