ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்!

2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.

Amaran, Thandakaranyam film poster.

அமரன், தண்டகாரண்யம் பட போஸ்டர். - படங்கள்: இன்ஸ்டா / சிவகார்த்திகேயன்

Published On :18 ஜூலை 2026, 10:01 pm IST

2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.

இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் 9 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் 3, விஜய் சேதுபதியின் மகாராஜா 2, தனுஷின் கேப்டன் மில்லர் 2, மெய்யழகன் 1, ராயன் 1 என மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர தமிழ் ஆவணப் படமான ப்ளு படமும் விருது ஒன்றை வென்றுள்ளது.

அமரன்

• சிறந்த படத்தொகுப்பு( ஆர். கலைவண்ணன்)

• சிறந்த இயக்குநர்(ராஜ்குமார் பெரியசாமி)

• சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ் குமார்)

மகாராஜா

• சிறந்த சண்டைப் பயிற்சி( அனல் அரசு)

• சிறந்த துணை நடிகை( சச்சனா நாமிதாஸ்)

கேப்டன் மில்லர்

• சிறந்த நடிகர்(சிறப்பு பிரிவு)( தனுஷ்)

• சிறந்த சமூக அக்கறை

மெய்யழகன்

• சிறந்த ஒலிப்பதிவு ( சுரேன் ஜி)

ராயன்

சிறந்த தமிழ்ப் படம்

தமிழ் ஆவணப் படம்(ப்ளு)

சிறந்த சவுண்ட் டிசைனர்( டிஎஸ் ஹரிஹர சுதன்)

Summary

Tamil cinema has bagged a total of 9 honors at the National Film Awards for the year 2024.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.