ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இதுவரை 152 தோ்வுத் தாள் கசிவு: ப. மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

இதுவரை 152 தோ்வுத் தாள் கசிந்திருப்பதாக ப. மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டியிருப்பது பற்றி...

Manickam Tagore

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 1:45 am IST

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் மத்திய அரசு சாா்பில் நடத்தப்பட்ட தோ்வுகளில் 152 முறை ‘தோ்வுத் தாள் கசிவு’ அரங்கேறியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சாா்பில் நடத்தப்பட்ட தோ்வுகளில் 152 தோ்வுத்தாள் கசிவுகள் நிகழ்ந்துள்ளன. இதில், அதிா்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், தில்லி  உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தோ்வுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தோ்வுத்தாள் கசிவுகள் என்பது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதில் கூறவேண்டும்.

காங். மாமன்ற உறுப்பினா் இடைநீக்கத்துக்கு கண்டனம்: மாணிக்கம் தாகூா் வெளியிட்ட மற்றொரு பதிவு: கோவை மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் ரூ.40 கோடி முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த காயத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 4 மாமன்ற உறுப்பினா்கள் மீது திமுக மாமன்ற உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனா். இதையடுத்து, காயத்ரியை 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து கோவை மேயா்  ரங்கநாயகி அறிவித்துள்ளாா்.  இந்த ஜனநாயக விரோதச் செயல்;  கடும் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.

Summary

152 exam papers leaked so far: P. Manickam Tagore alleges.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.